Saturday, October 27, 2012

வர்ணம் என்பது வ்ரு என்ற மூலத்திலிருந்து வரும் சொல்

வர்ணம் என்பது வ்ரு என்ற மூலத்திலிருந்து வரும் சொல். வ்ரு என்பதற்கு 'to choose ', தேர்ந்தெடுப்பது என்று பொருள்.. ஒரு வர்ணத்திலிருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாற முடியும்.. ஒருவன் எந்த செயலை அல்லது தொழிலை தேர்ந்தெடுக்கிறானோ அதைப் பொருத்து அவனது வர்ணம் அமையும்... எந்த வர்ணமாக இருந்தாலும் அதில் பேதம் எதுவும் இல்லை. அனைவரும் சமமே.... அனைத்து தொழில்களும் சிறந்தவையே....  இதில் எங்கிருந்து ஏற்றத்தாழ்வு வந்தது? ஒரு க்ஷத்ரியன் தன் செயல்கள் மூலம் வைஸ்யன்  ஆகலாம். ஒரு சூத்திரன் தன் செயல்கள் மூலம் பிராமணன் ஆக முடியும்.. இதுவே வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது. பல பெரியோர்கள் எடுத்துரைப்பது. ஒரு எழவும் தெரிந்து கொள்ளாமல் எவனோ வாந்தி எடுத்ததை முழுங்கி திரும்பி வாயில் எடுக்கும் கும்பலுக்கு எல்லாம் பதில் சொல்லி கட்டுபடி ஆகவில்லை.


 ஆ ஊ என்றால் ரிக் வேதத்தையும் மனு ஸ்ம்ருதியையும் quote செய்ய வேண்டியது... என்னவோ அதை முழுவதும் படித்து  விட்டது போல.. max muller   அரைகுறையாக புரிந்து கொண்டதை அவரிடமிருந்து இன்னும் அரைகுறையாக அறிந்து கொண்டு  எவனோ எழுதியதை மேலோட்டமாக படித்து விட்டு அல்லது கேள்விப்பட்டு உளரும் கும்பலுக்கு நான் சொல்வது இது தான்.. நீங்கள் என்னென்ன கேள்விகள் கேட்கிறீர்களோ அல்லது கேட்காமல் விட்டீர்களோ அத்தனைக்கும் பதில்கள் சொல்லப்பட்டு பல யுகங்கள் ஆகின்றன... உண்மையிலேயே புரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் 'தெய்வத்தின் குரல்' 7 பாகங்களையும் படித்து விட்டு பிறகு கேள்வி கேளுங்கள். கேட்பதற்கு ஒன்றும் இருக்காது என்பது வேறு விஷயம்.. அதை விட்டு விட்டு துவேஷத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் செய்வதால்  எந்த நன்மையும் விளையாது...
 
Custom Search