Sunday, December 23, 2012

MY TRINITY

My Trinity... the 3 most influential gurus in my life..Created a single image of the trinity... a long time wish.

Friday, December 14, 2012

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்! - இல. கணேசன்

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

இல. கணேசன்

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம். 

இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.

ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.

""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.

இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.

ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.

எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.

இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.

ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?

அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.

""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.

பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!

எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!

இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.

நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.

கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.

அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.

மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.

படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.

மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

Sunday, December 2, 2012

Human Brain Analysis

Human Brain Analysis - Man vs. Woman......A MUST READ!

1. MULTI-TASKING
Women - Multiple process
... Womens brains designed to concentrate multiple task at a time.
Women can Watch a TV and Talk over phone and cook.
Men - Single Process
Mens brains designed to concentrate only one work at a time. Men can not watch TV and talk over the phone at the same time. they stop the TV while Talking. They can either watch TV or talk over the phone or cook.

2. LANGUAGE
Women can easily learn many languages. But can not find solutions to problems. Men can not easily learn languages, they can easily solve problems. That's why in average a 3 years old girl has three times higher vocabulary than a 3 yeard old boy.

3. ANALYTICAL SKILLS
Mens brains has a lot of space for handling the analytical process. They can analyze and find the solution for a process and design a map of a building easily. But If a complex map is viewed by women, they can not understand it. Women can not understand the details of a map easily, For them it is just a dump of lines on a paper.

4. CAR DRIVING.
While driving a car, mans analytical spaces are used in his brain. He can drive a car fastly. If he sees an object at long distance, immediately his brain classifies the object (bus or van or car) direction and speed of the object and he drives accordingly. Where woman take a long time to recognize the object direction/ speed. Mans single process mind stops the audio in the car (if any), then concentrates only on driving.

5. LYING
When men lie to women face to face, they get caught easily. Womans super natural brain observes facial expression 70%, body language 20% and words coming from the mouth 10%. Mens brain does not have this. Women easily lie to men face to face.
So guys, do not lie face to face.

6. PROBLEMS SOLVING
If a man have a lot of problems, his brain clearly classifies the problems and puts them in individual rooms in the brain and then finds the solution one by one. You can see many guys looking at the sky for a long time. If a woman has a lot of problems, her brain can not classify the problems. she wants some one to hear that. After telling everything to a person she goes happily to bed. She does not worry about the problems being solved or not.

7. WHAT THEY WANT
Men want status, success, solutions, big process, etc... But Women want relationship, friends, family, etc...

8. UNHAPPINESS
If women are unhappy with their relations, they can not concentrate on their work. If men are unhappy with their work, they can not concentrate on the relations.

9. SPEECH
Women use indirect language in speech. But Men use direct language.

10. HANDLING EMOTION
Women talk a lot without thinking. Men act a lot without thinking..


More on Dr. Louann Brizendine's "The Male Brain"

http://frank.mtsu.edu/~studskl/braingen.jpg

Dr. Louann Brizendine's new book, The Male Brain, is turning out to be much better than I might have guessed. First up, in this video she introduces and talks about the ideas presented in her book.
Summary
Dr. Brizendine discusses her latest book, The Male Brain: A Breakthrough Understanding of How Men and Boys Think. An article about Dr. Louann Brizendine and her research in her first book The Female Brain in a July 2006 issue of Newsweek started a media frenzy that led to appearances on GMA's "20/20" and "Good Morning America," NBC's "The Today Show" and "News with Brian Williams," CNN's "American Morning," NPR's "Weekend All Things Considered," "Wait, Wait Don't Tell Me" along with national print reviews and features in USA TodayThe New York TimesThe New York Times MagazineThe Washington PostThe San Francisco Chronicle, O,The Oprah MagazineGlamourElleMoreDiscoverHealth, and the coverage has not abated.

Now, Brizendine, founder of the country's first clinic to study gender differences in brain, behavior, and hormones, turns her attention to the male brain, showing how the "male reality" is fundamentally different from the female’s in every phase of life, from babyhood to old age. In The Male Brain: A Breakthrough Understanding of How Men and Boys Think, Brizendine overturns the stereotypes about men and boys. Impeccably researched and at the cutting edge of scientific knowledge, this is a book that every man, and especially every woman bedeviled by a man, will need to own.

As you watch or listen to her speak, here is some of the info from the beginning of her book, including a summary of the fundamental brain centers in male brains that differ from female brains. The numbers in the image correspond to the list below.
The Male Brain
Scientists think of brain areas like the ACC, TPJ, and RCZ as being “hubs” of brain activation, sending electrical signals to other areas of the brain, causing behaviors to occur or not occur.

1. MEDIAL PREOPTIC AREA (MPOA): This is the area for sexual pursuit, found in the hypothalamus, and it is 2.5 times larger in the male. Men need it to start an erection.

2. TEMPORAL PARIETAL JUNCTION (TPJ): The solution seeker, this “cognitive empathy” brain hub rallies the brain’s resources to solve distressing problems while taking into account the perspective of the other person or people involved. During interpersonal emotional exchanges, it’s more active in the male brain, comes on-line more quickly, and races toward a “fix-it-fast” solution.

3. DORSAL PREMAMMILLARY NUCLEUS (DPN): The defend-your-turf area, it lies deep inside the hypothalamus and contains the circuitry for a male’s instinctive one-upmanship, territorial defense, fear, and aggression. It’s larger in males than in females and contains special circuits to detect territorial challenges by other males, making men more sensitive to potential turf threats.

4. AMYGDALA: The alarm system for threats, fear, and danger. Drives emotional impulses. It gets fired up to fight by testosterone, vasopressin, and cortisol and is calmed by oxytocin. This area is larger in men than in women.

5. ROSTRAL CINGULATE ZONE (RCZ): The brain’s barometer for registering social approval or disapproval. This “I am accepted or not” area keeps humans from making the most fundamental social mistake: being too different from others. The RCZ is the brain center for processing social errors. It alerts us when we’re not hitting the mark in our relationship or job. During puberty, it may help males reset their facial responses to hide their emotions.

6. VENTRAL TEGMENTAL AREA (VTA): It’s the motivation center—an area deep in the center of the brain that manufactures dopamine, a neurotransmitter required for initiating movement, motivation, and reward. It is more active in the male brain.

7. PERIAQUEDUCTAL GRAY (PAG): The PAG is part of the brain’s pain circuit, helping to control involuntary pleasure and pain. During sexual intercourse, it is the center for pain suppression, intense pleasure, and moaning. It is more active during sex in the male brain.

8. MIRROR-NEURON SYSTEM (MNS): The “I feel what you feel” emotional empathy system. Gets in sync with others’ emotions by reading facial expressions and interpreting tone of voice and other nonverbal emotional cues. It is larger and more active in the female brain.

9. ANTERIOR CINGULATE CORTEX (ACC): It’s the worry-wart, fear-of-punishment area and center of sexual performance anxiety. It’s smaller in men than in women. It weighs options, detects conflicts, motivates decisions. Testosterone decreases worries about punishment. The ACC is also the area for self-consciousness.

10. PREFRONTAL CORTEX (PFC): The CEO of the brain, the PFC focuses on the matter at hand and makes good judgments. This “pay total attention to this now” area also works as an inhibiting system to put the brakes on impulses. It’s larger in women and matures faster in females than in males by one to two years.
From here she goes on to list and describe the basic neurotransmitters and hormones that shape the male brain differently than the female brain.
THE CAST OF NEUROHORMONE CHARACTERS
(how hormones affect a man’s brain)

TESTOSTERONE—Zeus. King of the male hormones, he is dominant, aggressive, and all-powerful. Focused and goal-oriented, he feverishly builds all that is male, including the compulsion to outrank other males in the pecking order. He drives the masculine sweat glands to produce the come-hither smell of manhood—androstenedione. He activates the sex and aggression circuits, and he’s single-minded in his dogged pursuit of his desired mate. Prized for his confidence and bravery, he can be a convincing seducer, but when he’s irritable, he can be the grouchiest of bears.

VASOPRESSIN—The White Knight. Vasopressin is the hormone of gallantry and monogamy, aggressively protecting and defending turf, mate, and children. Along with testosterone, he runs the male brain circuits and enhances masculinity.

MÜLLERIAN INHIBITING SUBSTANCE (MIS)—Hercules. He’s strong, tough, and fearless. Also known as the Defeminizer, he ruthlessly strips away all that is feminine from the male. MIS builds brain circuits for exploratory behavior, suppresses brain circuits for female-type behaviors, destroys the female reproductive organs, and helps build the male reproductive organs and brain circuits.

OXYTOCIN—The Lion Tamer. With just a few cuddles and strokes, this “down, boy” hormone settles and calms even the fiercest of beasts. He increases empathic ability and builds trust circuits, romantic-love circuits, and attachment circuits in the brain. He reduces stress hormones, lowers men’s blood pressure, and plays a major role in fathers’ bonding with their infants. He promotes feelings of safety and security and is to blame for a man’s “postcoital narcolepsy.”

PROLACTIN—Mr. Mom. He causes sympathetic pregnancy (couvade syndrome) in fathers-to-be and increases dads’ ability to hear their babies cry. He stimulates connections in the male brain for paternal behavior and decreases sex drive.

CORTISOL—The Gladiator. When threatened, he is angry, fired up, and willing to fight for life and limb.

ANDROSTENEDIONE—Romeo. The charming seducer of women. When released by the skin as a pheromone he does more for a man’s sex appeal than any aftershave or cologne.

DOPAMINE—The Energizer. The intoxicating life of the party, he’s all about feeling good, having fun, and going for the gusto. Excited and highly motivated, he’s pumped up to win and driven to hit the jackpot again and again. But watch out—he is addictively rewarding, particularly in the rough-and-tumble play of boyhood and the sexual play of manhood, where dopamine increases ecstasy during orgasm.

ESTROGEN—The Queen. Although she doesn’t have the same power over a man as Zeus, she may be the true force behind the throne, running most of the male brain circuits. She has the ability to increase his desire to cuddle and relate by stimulating his oxytocin.
These basic differences set the stage for the rest of the book. I think one of the real strengths in her book is that she acknowledges and does not pathologize the essential differences in male brains, especially in boys where there are some real innate differences in how boys play, relate to others, and so on.

Likewise, she seems to allow that biology is not destiny, and she acknowledges the role that socialization and upbringing can have on shaping male behaviors. For example, the way that men and women express emotions differently may be partly genetic, but there is a huge learning element to this that begins in early, early childhood so that men suppress expressions of emotions almost unconsciously:
From childhood on, males learn that acting cool and hiding their fears are the unwritten laws of masculinity. And especially since his testosterone surge at age thirteen, Neil had been practicing his guy face to be sure he kept his emotions to himself. For a man to physically strike a pose of self-confidence and strength, he must train his facial muscles to mask his fear.

Because facial muscles are controlled by the brain’s emotional circuits, scientists have been able to learn about emotions by measuring these muscles. Researchers in one study placed electrodes on men’s and women’s smiling muscle—the zygomaticus—and on the anger/scowling muscle—the corrugator. They recorded the muscles’ electrical activity as the men and women viewed emotionally provocative photos. Much to the scientists’ surprise, the men, after seeing an emotional face for just one fifth of a second—so briefly that it was still unconscious—were more emotionally reactive than the women. But it’s what happened to the men’s facial muscles next that helped me explain Neil’s guy face to Danielle.

As the experiment proceeded, at 2.5 seconds, well into the range of conscious processing, the men’s facial muscles became less emotionally responsive than the women’s. The researchers concluded that the men consciously—or at least semiconsciously—suppressed showing their emotions on their faces. Meanwhile, the women’s facial muscles became more emotionally responsive after 2.5 seconds. According to the researchers, this suggests that men have trained themselves, perhaps since childhood, to automatically turn off or disguise facial emotions. The females’ expressions not only continued to mirror the emotion they were seeing on the face in the photo, but they automatically exaggerated it, from a grin to a big smile or from a subtle frown to a pout. They, too, had been practicing this since childhood. (p. 134-135)
Anyway, I highly recommend the book.

http://masculineheart.blogspot.in/2010/04/more-on-dr-louann-brizendines-male.html

Wednesday, November 28, 2012

Vedic Learning

Veda Learning.

The vedic scholars get into vedapadasla and learn in Guru kula vasa style.They start learn with Vakyam,then Padam, kramam, Jata, Mala, Sikha, Rekha, Dwaja, Danda, Ratha and then they reach Ganam.
Then only they are called as Ganapadikal. It takes 8 to 13 years to go to Ganam level .

The system for vedic learning starts with Panchadhi,few panchadhi's called anu vagam,few anuvagam called as Prassanam,more prasannam called as Kandam and more kandams called only sagai.

The vedic adhyashagas avoid teaching veda on Ashtami,Sadurdasi,Pournami,Amavasya and Prathamai days. Some avoid cloudy days too.





via 
Kalyanasundaram Ramachandaran

Wednesday, November 21, 2012

think of any number. add 2 to it. double it...

think of any number. add 2 to it. double it. add 2 to it. double it.. divide by 4. add 1. subtract the original number you thought from the result. remember this answer.

select 'a'if your answer is 1, 'b' if your answer is 2 etc. 

Now, think of a country starting with that alphabet

now, think of an animal, small or big, which starts with the next alphabet (b, if your first letter was a, c if your first letter was b etc.) think of its colour..

mmmm.. let me guess... there are no grey/black elephants in denmark... :)

the above is a standard item in magic shows..

My point is with this limited, silly mind we question several things beyond our comprehension...

நீங்கள் எவ்வளவு தெய்வீகமானவர்கள் என்று உங்களுக்கு காட்டுகிறேன்.. மிகவும் யோசிக்காமல் சட்டென்று 2 பூக்கள் பெயரை நினைத்துக் கொள்ளுங்கள்.

எல்லோரும் என்ன தெரியுமா நினைப்பார்கள்? செம்பருத்தி, செண்பகப்பூ என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் ரோஜா, மல்லி என்று நினைத்திருக்கிறீர்கள். இது நீங்கள் மல்லிகைப்பூவைப் போல தூய்மையான மற்றும் ரோஜாவைப் போன்று மென்மையான மனது கொண்டவர்கள் என்று காட்டுகிறது...

இது நம்மூரு டுபாகூரு. மேலே சொன்னது அவங்கூரு டுபாகூர்.

இந்த சிறுமதியை வைத்துக்கொண்டு பெரிதினும் பெரிய விஷயங்களைப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

Thursday, November 15, 2012

எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

-----------------------------------------------------------------------------

டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்தப் பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்:

"எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.

தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.

எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.

அது சரி “வடமொழி” என்றால்? சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

(2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).

Courtesy: Vijaya Bharatham 7.9. 2012

Tuesday, November 6, 2012

மோக்ஷம் அருளிய மகான்

ரெண்டு ஆசை- மஹா பெரியவாளிடம் ஒரு தெலுங்கு சிறுவன்

ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. "சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்". “ அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? “ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்" மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது. 

ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா. 

ஏழுஎட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமிந்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு த ங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறென்று கொட்டகை போடப்பட்டது. 

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று, பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு "வில்வம் இல்லையா?" என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர், “சுவாமி, ஜமிந்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்” என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டா. 

பதினொன்னரை மணியிருக்கும் இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே”??? த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா. 

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். “”வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.“யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்”” என்று பெரியவா சொல்லி சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. “” யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம்வாங்கிக்கட்டும்”” என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே "பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே, கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே."

“ ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்”” என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா, இசை, பிரவசனம், பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது??? . 

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் " “அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!” சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார். 

"ஆமாம்!, பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டுவச்ச வில்வகூடை தான் இது.” “ யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா””. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன், தலையிலே கட்டு குடுமி, அழுக்குவேஷ்டி மூலகச்சம், தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான். 

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே "போய் குளிச்சுட்டு, தலையை முடிஞ்சுண்டு, நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு மத்யானம் வா, சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்””.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி, நெத்தி பூராவிபுதி, எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான். 

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.
“நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன? 
“புரந்தர கேசவலு”’ங்கய்யா.
“தமிழ் பேசறியே, எப்படி??”
“அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு புழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு.ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ””.
“”அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே ;உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??”
“நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாரு, “” ஏலே, புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை”” அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் எண்டு பேசிக்கிட்டாங்க. 
சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க”” 

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே “”புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை, ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து செய்ய சொல்றேன்”” என்றார். 

"சிவ சிவா!! சாமி, எங்கப்பாரு “ஏலே புரந்தரா, எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்”” கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் “”புரந்தரா, உன்னுடைய முதல் ஆசையை சொல்லு” என்றார். 

“சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதைகேக்கணும்””. மஹா பெரியவா புலகாங்கிதமானாள். “அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே”””. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார். 

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன்நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து “” புரந்தரா, உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

“ சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா, நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி, எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க,””

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.”” புரந்தரா, உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ”. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ”” என்றார். 

பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. பெரியவா கரையேறினா. 

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ “”கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ “”” புரந்தரகேசவலு சீரியஸ்”” என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா”” . 

ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

“”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்".

via varagooran narayanan

Saturday, October 27, 2012

வர்ணம் என்பது வ்ரு என்ற மூலத்திலிருந்து வரும் சொல்

வர்ணம் என்பது வ்ரு என்ற மூலத்திலிருந்து வரும் சொல். வ்ரு என்பதற்கு 'to choose ', தேர்ந்தெடுப்பது என்று பொருள்.. ஒரு வர்ணத்திலிருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாற முடியும்.. ஒருவன் எந்த செயலை அல்லது தொழிலை தேர்ந்தெடுக்கிறானோ அதைப் பொருத்து அவனது வர்ணம் அமையும்... எந்த வர்ணமாக இருந்தாலும் அதில் பேதம் எதுவும் இல்லை. அனைவரும் சமமே.... அனைத்து தொழில்களும் சிறந்தவையே....  இதில் எங்கிருந்து ஏற்றத்தாழ்வு வந்தது? ஒரு க்ஷத்ரியன் தன் செயல்கள் மூலம் வைஸ்யன்  ஆகலாம். ஒரு சூத்திரன் தன் செயல்கள் மூலம் பிராமணன் ஆக முடியும்.. இதுவே வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது. பல பெரியோர்கள் எடுத்துரைப்பது. ஒரு எழவும் தெரிந்து கொள்ளாமல் எவனோ வாந்தி எடுத்ததை முழுங்கி திரும்பி வாயில் எடுக்கும் கும்பலுக்கு எல்லாம் பதில் சொல்லி கட்டுபடி ஆகவில்லை.


 ஆ ஊ என்றால் ரிக் வேதத்தையும் மனு ஸ்ம்ருதியையும் quote செய்ய வேண்டியது... என்னவோ அதை முழுவதும் படித்து  விட்டது போல.. max muller   அரைகுறையாக புரிந்து கொண்டதை அவரிடமிருந்து இன்னும் அரைகுறையாக அறிந்து கொண்டு  எவனோ எழுதியதை மேலோட்டமாக படித்து விட்டு அல்லது கேள்விப்பட்டு உளரும் கும்பலுக்கு நான் சொல்வது இது தான்.. நீங்கள் என்னென்ன கேள்விகள் கேட்கிறீர்களோ அல்லது கேட்காமல் விட்டீர்களோ அத்தனைக்கும் பதில்கள் சொல்லப்பட்டு பல யுகங்கள் ஆகின்றன... உண்மையிலேயே புரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் 'தெய்வத்தின் குரல்' 7 பாகங்களையும் படித்து விட்டு பிறகு கேள்வி கேளுங்கள். கேட்பதற்கு ஒன்றும் இருக்காது என்பது வேறு விஷயம்.. அதை விட்டு விட்டு துவேஷத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் செய்வதால்  எந்த நன்மையும் விளையாது...

Saturday, October 13, 2012

Sri Lalitha Sahasranamam - Bhaskara raya mahi - Mahaperiyava

பாஸ்கரராய மஹி என்பவர் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு 'சௌபாக்ய பாஸ்கரம்' என்னும் தலைப்பில் உரை எழுதியிருக்கிறார்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியிருப்பதாக ரொம்பப் பேர் நினைப்பார்கள்.
ஏதாவது விசேஷமான நூலாக இருந்தால் அது சங்கரர் இயற்றியது என்று நினைத்துவிடுவது வழக்கம். அந்தக் காலத்திலேயே பல நூல்களின் அடியில் 'சங்கராச்சார்ய விரசித' என்று போட்டுப் பிரகடனப்படுத்திக்கொள்வார்கள்.

இதில் எத்தனை நூல்கள் - எந்தெந்த நூல்கள் உண்மையிலேயே ஆதிசங்கரரால் இயற்றப்பட்டவை என்பதை யாரும் ஆராயவில்லை.

எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் ஆதிசங்கரர் பெயரால் உலவும் நூல்களுக்கும் யாராவது ஒரு வடிகட்டல் செய்தார்களானால் ரொம்பவும் நல்லது.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு ஆதிசங்கரர் உரையெழுதமுயன்றும் அவரால் எழுதமுடியவில்லை.

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு உரையெழுத ஒருநாள் ஆதிசங்கரர் நினைத்தார். அவருடைய மடத்தில் நூல் நிலையம் ஒன்று இருந்தது. அதை 'ஸரஸ்வதி பண்டாரம்' என்று குறிப்பிடுவார்கள். ஆயிரக்கணக்கில் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஸரஸ்வதி பண்டாரம் என்பதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிறேன். 
அவருடை சீடர்களில் ஒருவரைக் கூப்பிட்டு ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் சுவடியைக் கொண்டு வரச ்சொன்னார்.
அவரும் நூல் அறைக்குள் சென்று ஒரு சுவடியைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து ஆதிசங்கரரிடம் கொடுத்தார். 
அதைப் பிரித்துப் பார்த்தார் சங்கரர். ஆனால் அது 'விஷ்ணு ஸஹஸ்ரநாமம்' ஏடு. சீடரிடம் அதைத் திருப்பிக் கொடுத்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு வரச் சொன்னார்.
சீடர் நூலறைக்குச் சென்று, மீண்டும் ஒரு சுவடியைக் கொணர்ந்தார். 
அதுவும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்தான். 
மீண்டும் ஒழுங்காகக் கொண்டுவரச் சொல்லி சங்கரர் சீடரைத் திருப்பி அனுப்பினார்.
மீண்டும் வந்தது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்தான்.
சீடரிடம் காரணம் கேட்டார்.
"நான் என்ன செய்வது? அறையில் இருந்து ஒழுங்காகத்தான் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம சுவடியை எடுக்கிறேன். ஆனால் அந்த அறைக்குள் ஒரு பெண் நின்றுகொண்டு, என்னைத் தடுத்து, கையில் இருக்கும் சுவடியை வாங்கிக ்கொண்டு, "இதைக் கொண்டுபோய்க் கொடு", என்று சொல்லி, இதையே கொடுத்து அனுப்புகிறாள். அவளை ஏதும் மறுத்துக் கேட்பதற்குத் தோன்றவில்லை. இவ்வாறு மூன்று தடவை நடந்துவிட்டது", என்றார் சீடர்.
உள்ளே இருப்பவள் அம்பிகைதான் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த ஆதிசங்கரர் உடனடியாக விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யத்தை எழுதினார்.

பின்னால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாஸ்கரராயமகியே ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதினார்.

அவர் ஒரு மாபெரும் உபாசகர், மேதை, மிகப் பெரும் கல்விமான். பல கலைகளையும் ஆழமாக அறிந்தவர். வேத, ஆகம, தந்திர சாஸ்திரங்களிலும் இதிகாசங்கள், புராணங்கள், யோகம், சித்தாந்தம், வேதாந்தம், தர்க்கம், மந்திர சாஸ்திரங்கள் போன்ற அனைத்திலும் துறைபோகியவர்.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். மஹாராஷ்டிரர்.
பல ரகசிய நூல்கள், கோட்பாடுகள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், ரகசிய சமயங்கள் போன்றவற்றை நன்கு அறிந்தவர்.
அம்பிகை உபாசனையில் பல கட்டங்களைத் தாண்டியவர்.
பல அபூர்வ ஆற்றல்கள் படைத்தவர்.
அவருடைய வரலாற்றை இன்னொரு கட்டுரையில் காணலாம்.
சிறுவயதாக இருக்கும்போதே பெரிய அறிஞராகிய அவருடைய தந்தையார் பாஸ்கரராயரைக் காசிக்கு அனுப்பி, அங்கு இருந்த மிகப் பெரிய கல்விமான்களிடம் கல்வி கற்க வைத்தார். பல இடங்களில் அவர் நிகழ்த்திய வாதப்பிரதிவாதங்களைப் பற்றி கேள்விப்பட்ட தஞ்சாவூர் மன்னர் அவரைத் தம்மிடம் வரவழைத்துக் கொண்டார். காவிரிக்கரையில் பாஸ்கரராயபுரம் என்னும் கிராமத்தை ஏற்படுத்தி அவருக்குத் தானமாகக் கொடுத்து அங்கேயே வைத்துக் கொண்டார். தமக்குத் தஞ்சை மன்னரால் கொடுப்பட்ட கிராமத்தில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். தாந்திரிக அமைப்புக் கொண்டது அந்தக் கோயில் என்பார்கள்.
வரிவஸ்யா ரஹஸ்யம், சேதுபந்தம், ஸௌபாக்ய பாஸ்கரம் ஆகிய அரிய நூல்களை இயற்றிவர். கணேச ஸஹஸ்ரநாமம்,
ஸ்ரீ£லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகியவற்றுக்கு உரையும் விளக்கமும் எழுதியவர்.
இவற்றில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு அவர் எழுதிய பாஷ்யமே 'சௌபாக்ய பாஸ்கரம்' என்ற பெயர் பெற்றது.
அந்த நாமாவளியில் உள்ள ஆயிரம் நாமங்களுக்கும் அவர் எழுதியுள்ள உரையைப் பத்து அத்தியாயங்களாக ஆக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூறு நாமாக்களின் உரை இருக்கும்.
இந்த உரை நூலை அவர் காசியில் ஒரு சபையைக் கூட்டி அங்கு அரங்கேற்றம் செய்தார்.
அந்த அரங்கத்தில் அவர் ஒவ்வொரு நாமத்தையும் சொல்லி அதற்குரிய பொருளையும் பொருள் விளக்கத்தையும் சொல்லிக் கொண்டே வந்தார்,
கூடியிருந்த அறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமா வருகிறது.

'மஹாசதுஷ்ஷஷ்டி கோடி யோகினி கண ஸேவிதா' - அறுபத்துநான்கு கோடி யோகினி கணத்தாரால் சேவிக்கப்படுகிறவள்.
அதை விளக்கும்போது ஓர் அறிஞர் அவரைக் கேட்டார்:
"உண்மையிலேயே அறுபத்து நான்கு கோடி யோகினிகள் இருக்கின்றனரா?"
இருப்பதாக ராயரவர்கள் சொன்னார்.
"அப்படியானால் அவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்"
"அப்படியே சொல்கிறேன். நான் சொல்லச் சொல்ல நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்."
பாஸ்கரராயர் வரிசையாக யோகினிகளின் பெயர்களைச் சொல்லலானார்.
அவர் சொல்லச் சொல்ல காசிப் பண்டிதர் எழுதிக் கொண்டே வந்தார்.
ஒரு நாள், இரண்டு நாள் ஆகியது.
மூன்றாவது நாள் அந்தப் பண்டிதருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பாஸ்கரராயரை நன்கு ஏறிட்டுப் பார்த்தார்.
அப்போது ஒரு காட்சி தென்பட்டது.
பாஸ்கரராயரின் தோளில் சிறிய உருவில் அமர்ந்து கொண்டு அம்பிகையே வரிசையாகத் தம்முடைய அறுபத்துநான்கு கோடி யோகினிகளின் பெயர்களையும் சொல்லிக ்கொண்டிருப்பதைக் கண்டார். அம்பிகை வேறு யார் கண்களுக்கும் தெரியவில்லை.
அவள் சொல்லிக்கொண்டிருந்த பெயர்கள் பாஸ்கர ராயருக்கு மட்டுமே கேட்டன. அவற்றை அப்படியே பாஸ்கரராயர் சொல்லிக்கொண்டிருந்தார். அதைத்தான் காசிப ்பண்டிதரும் எழுதிக்கொண்டே வந்திருக்கிறார்.
இதைக் கண்டவுடன் அந்தப் பண்டிதர் பாஸ்கரராயரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
அதன்பின்னர் அந்த அரங்கேற்றம் தடையில்லாமல் நடந்தேறியது.
அந்த அரிய உரையில் பல நுணுக்கமான விஷயங்களைப் பார்க்கலாம்.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாம மந்திரம் இருக்கிறது.

'சதுஷ்ஷஷ்டிகலாமயி'

'அறுபத்து நான்கு கலைகளுக்கும் தாயாக விளங்குபவள்' என்று பொருள்.
இம்மந்திரத்திற்கு விளக்கம் கொடுக்கும் இடத்தில், பாஸ்கரராயர் அறுபத்துநான்கு கலைகளுக்கும் பட்டியலிட்டு, அவை என்னென்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வளவு விரிவானது அந்த உரை நூல்.

Sunday, October 7, 2012

Maha periyava padhame saranam..


தினம் தினம் திருநாளே!

சேத்திரங்கள் பலவற்றுக்கும் சென்று, அங்கு உறைந்திருக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும்; புண்ணிய நதிகளில்- தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. மகாமகம், கும்பமேளா போன்ற புண்ணிய காலங்களில் லட்சக்கணக் கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவதை இன்றைக்கும் காணலாம்! புண்ணிய நதிகளில் நீராடினால்… பாவங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி பெருகும்!

‘கடலைக் காண்பதே விசேஷம். இதைப் பார்ப்பதே புண்ணியத்தைத் தரும்’ என்பர். ஆனால், சாதாரண நாளில், கடலில் நீராடக் கூடாது. ஆடி மற்றும் தை அமாவாசை, கிரகணம், மாசி மகம் போன்ற புண்ணிய காலங்களில் மட்டுமே கடலில் நீராடலாம். ஆனால் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் உள்ள கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் பெறலாம்.

காஞ்சி மகா பெரியவர், தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஆடி அமாவாசை புண்ணிய காலம் நெருங்குவதையட்டி, வேதாரண்யத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார் பெரியவாள்! அதற்கு தக்கபடி தனது யாத்திரையை அமைத்துக் கொண்டார் ஸ்வாமிகள்.

ஸ்ரீராமபிரான், காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு வார்த்தையையும் பேச மாட்டார்; செயல்பட மாட்டார் என்பர். மகான்களும் அப்படித்தான்… வெட்டிப் பேச்சுகளும் வீண் செயல்களும் அவர்களிடம் இருக்காது!

யாத்திரையின்போது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத் தங்கி, பூஜைகளை முடித்துக் கொண்டு பிறகு பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தபோது, அங்கு பசியால் வாடிய நிலையில், ஒருவர் வந்தார்.

அவரைக் கண்டதும் மடத்து மேனேஜரை அழைத்த ஸ்வாமிகள், ”இவருக்கு ஆகாரம் கொடு; அப்படியே நல்ல வேஷ்டி- துண்டும் கொடு” என்றார். மேனேஜரும் அப்படியே செய்தார்

பிறகு பெரியவாளிடம் வந்து, ”தங்களின் உத்தரவுப்படி உணவும் உடையும் கொடுத்தாச்சு. அவரை அனுப்பிடலாமா?” என்று கேட்டார்.

உடனே பெரியவாள், ”மடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ… அதேபோல இவரையும் கவனியுங்கள்; ராஜோபசாரம் செய்யுங் கள்” என்றார்.

மேனேஜருக்குக் குழப்பம்! இருப்பினும் பெரியவாளின் உத்தரவுப்படி, யாத்திரையில் புதிய நபரும் உடன் வந்தார்.

தினமும் மேனேஜரிடம், ‘அவருக்கு சாதம் போட்டாயா?’, ‘அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா?’ என்று விசாரித்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிகள்.

நாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீரென மது அருந்தி விட்டு வந்தார். கடவுளைத் திட்டினார்; மடத்து ஊழியர்களைக் கண்டபடி ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உடை தந்து ஆதரித்த பெரியவாளையும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.

இதைக் கண்டு பொறுமை இழந்த மேனேஜர், ஓடோடி வந்து, பெரியவாளிடம் விவரம் முழுவதும் சொன்னார். ‘இந்த ஆசாமியை அனுப்பி விடுங்கள்’ என்று வேண்டினார்.

இதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பெரியவாள். இம்மியளவு கூட அந்த ஆசாமி மீது கோபமே வரவில்லை ஸ்வாமிகளுக்கு!

”ஸ்வாமி! அந்த ஆசாமியை அனுப்பிடட்டுமா?” என்று மீண்டும் கேட்டார் மேனேஜர். ஆனால், பெரியவாள் மறுத்துவிட்டார்.

ஆடி அமாவாசை! இந்த நாளில் காஞ்சி மகா பெரியவாள், வேதாரண்யத்தில் சமுத்திர ஸ்நானம் செய்யப் போகிறார் எனும் தகவல் அறிந்து சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேதாரண்யத்துக்கு வந்து சேர்ந்தனர்.

ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம்; அதிலும் காஞ்சி மகானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங் கூட்டமாக கடற் கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகளும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்!

ஸ்வாமிகள் கடற்கரைக்கு வந்தார்; அவரை அனைவரும் நமஸ்கரித்தனர்; நீராடுவதற்காக கடலில் இறங்கினார் பெரியவாள்! அவரைத் தொடர்ந்து மூதாட்டிகள் உட்பட எண்ணற்ற பக்தர்கள் பலரும் தபதபவென கடலில் இறங்கினர்.

அவ்வளவுதான்! மூதாட்டிகள் சிலரை அலை இழுத்துச் செல்ல… பலரும் செய்வதறியாமல் தவித்து மருகினர்.



அப்போது… ஆரவார அலைகளைப் பொருட் படுத்தாமல் பாய்ந்து சென்று, மூதாட்டிகளை இழுத்து வந்து, கரையில் சேர்த்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல… பெரியவாள் உட்பட அனைவரையும் மது போதையில் ஏசினானே… அந்த ஆசாமிதான்!

இவற்றைக் கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். மகான்கள் தீர்க்கதரிசிகள்!

அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

மகான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே!

 
Custom Search