Sunday, October 15, 2017

முதல் கதை

மாலினி ஓலாவிற்கு பணம் கொடுத்து விட்டு தன் அமெரிக்கன் டூரிஸ்டருடன் சென்னை ஏர்போர்ட்டில் நுழைந்தாள். வெப் செக்கின் செய்திருந்ததால் கியூவில் நிற்காமல் லக்கேஜ் மட்டும் செக்கின் செய்துவிட்டு நேராக லவுஞ்சுக்கு சென்றாள். id யில் மொறுமொறு மெதுவடை ஒன்றேயொன்று சாப்பிடலாமா என்ற சபலத்தை அடக்கிக்கொண்டாள். எப்படியும் பிசினெஸ் கிளாசில் ஏதாவது கொடுத்துக்கொண்டே தான் இருப்பார்கள் என்று சமாதானப் படுத்திக்கொண்டாள்.

எமிரேட்ஸ் விமானம் துபாய் செல்லும் பயணிகளை அழைத்தது. விமானத்தின் உள்ளே சென்று தன் ஹாண்ட் லக்கேஜை வைக்க சற்று சிரமப்பட்டாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரவி சட்டென்று எழுந்து உதவினான். ஒரு புன்னகை பூத்தாள். பதிலேதும் சொல்லவில்லை.

பேச்சை ஆரம்பிக்க தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

"ஹாய் ஆம் ரவி. "

"ஹாய்.. அம் மாலினி"

"விஜய் டிவியில் வாய்ஸ் டிரைனரா இருக்கேன்.. நீங்க?"

"ஐ அம் எ மாடல்"

"நான் கொஞ்சம் டியூப்லைட்.. உங்க உயரத்தையும், அழகையும் பார்த்து நானே கெஸ் பண்ணிருக்கணும்.. என் வேலையை மாத்தி சொல்லலாமா?"

மாலினி பெரிய ஜோக் கேட்டது போல சிரித்தாள்.

"மாடலிங்.. கேட்வாக்கா இல்ல ஃபேஷனா?"

"இரண்டும் பண்ணுவேன்.."

"துபாயில் பேஷன் ஷோன்னா புர்கா போட்டுக்கிட்டு தான் மாடல்ஸ் வருவாங்களா?"

இதற்கும் வாய்விட்டு சிரித்தாள்..

"நான் வெக்கேஷனுக்கு  தான் போறேன்"

"நான் கூட.. காம்ப்ளிமென்டரி டூர் தான்"

நிறைய உளறிவிட்டோம் என்று உணர்ந்து கொஞ்சம் அமைதியானான்.

விமானம் கிளம்பும் முன் பைலட் ஏதோ பேசினார். யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. காது அடைக்காமல் இருக்க புளிப்பு மிட்டாய் கொடுத்தார்கள். அதை சில பேர் மட்டும் வாயில் போட்டுக்கொண்டார்கள்.
விமானம் கிளம்பி சிறிது நேரம் கழித்து சீட் பெல்ட்டை கழட்டிக்கொள்ளலாம்..லேப்டாப்பில் வேலை செய்யலாம் என்று பணிப்பெண் சொன்னதும் தான் பாதி பேருக்கு உயிர் வந்தது..

ரவி மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான்..


"உங்கள் வேலை எப்படியென்று தெரியவில்லை..ஆனால் என் வேலை சரியான ரோதனை..கண்டவன் எல்லாம் பாட்டு பாடறேன்னு வந்து உயிரை வாங்குவானுங்க.. அவனுக்கு வாய்ஸ் ட்ரைனிங் கொடுக்றதுக்குள்ள நம்ம குரல் கெட்டு போயிடும்"

"எனக்கு ஒரு பாய்பிரென்ட் இருந்தான்..முகுந்த்.. அவனுக்கு எப்படியாவது சூப்பர் சிங்கர்ல ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசை"

"எனக்கு கூட முகுந்த் னு ஒரு பையனை தெரியும். 2-3 வருஷத்துக்கு முன்னாடி வாய்ஸ் டெஸ்ட்டிங்க்கு வந்திருந்தான்.. ஆனா உங்க பிரெண்டு மாதிரி இல்ல. கண்ராவியான குரல்.. பேசும் போது நல்ல டிம்பர்.. ஆனா பாடினான்னா கர்ண கொடூரம்.. கொஞ்சம் ட்ரை பண்ணேன்.. முடியல.. நல்லா திட்டி விட்டுட்டேன்..அன்னைக்கு போனவன் தான் .. அப்புறம் அவனை பார்க்கவே இல்ல.."

"அன்னிக்கு எவ்ளோ அழுதான் தெரியுமா?"

ரவி அதிர்ச்சியானான்..

"அப்படின்னா..?"

"ஆமாம்.. அதே முகுந்த் தான்.. ரொம்ப அப்செட்டா இருந்தான் 2 மாசத்துக்கு. அவனோட லைஃப்டைம் ஆம்பிஷனே அதான்."

"சாரி..உங்க கிட்டேயே.."

"இட்ஸ் ஓகே..வி ஆர் நோ மோர் சீயிங் ஈச் அதர்"

"ஏங்க.. என்னாச்சு?"

"அவன் ரொம்ப சென்சிடிவ்.. ஒரு தடவை அவனோட பிரென்ட் ஹரியோடு என்னை மால் ல பார்த்தான்.. அதுக்கப்புறம் சரியா பேசல.. கொஞ்ச நாள் கழிச்சு ஊரை விட்டே போயிட்டான்.. காண்டாக்டே இல்ல அப்புறம்."

"ஹே மாலினி.. வாட் எ சர்ப்ரைஸ்.." குரல் கேட்டு திரும்பினாள் மாலினி..

"ஹே ஹரி.. எப்படியா இருக்க? எவ்வளோ நாளாச்சு பார்த்து.. ஸ்டில் இன் சென்னை?"

"வெரி மச் யா.. நீ அப்படியே இருக்க.. நாட் அன் அவுன்ஸ் மோர்.."

"தேங்க்ஸ் யா .. திஸ் இஸ் ரவி. முகுந்த் பத்தி பேசிட்டு இருந்தோம்.."

"ஓ..அவனா.. சரியான சைக்கோ.. வாழ்க்கையில எதையும் லைட்டா எடுத்துக்க தெரியாத முட்டாள்.. ஸ்கூல் டேஸ் ல இருந்தே அவன் அப்படித்தான்"

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அவ்வப்பொழுது திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு வயதான மாமி.. திடீரென்று ஞாபகம் வந்தவராய் "நீ ஹரி தானே.. என்னை தெரியறதா.. வசந்தா மிஸ்.." என்றார்.

"வாவ்.. ஹௌ ஆர் யு மேடம் ? இன்னைக்கு என்ன சர்ப்ரைஸ் தினமா? பார்த்து பல வருஷம் ஆன எல்லோரும் காட்சி கொடுக்கறீங்க.. இட்ஸ் ரியலி வியர்ட் மேன்.. ஐ மீன் லேடீஸ்.."

"நீங்க எல்லோரும் என் கிளாஸ் ல படிச்சானே அந்த முகுந்தை பத்தியா பேசிண்டு இருந்தீங்க?"

"ஆமாம் மேடம்.. ஏன் கேக்கறீங்க?"

"இல்ல.. ஒரு வருஷம் தான் அவன் என் கிளாஸ் ஸ்டுடென்ட்டா இருந்தான்..அப்புறம் செக்ஷன் மாறிட்டான்.. ஒரு தடவை மேத்ஸ் புரியலேன்னு சொன்னான்.. 4, 5 தடவை சொல்லிக்கொடுத்தும் புரியலேன்னு சொன்னான். கோவத்துல திட்டிட்டேன்.. அடுத்த நாள் கையிலே ப்ளேடால வெட்டிண்டுட்டான்.. பெரிய பிரச்னை ஆச்சு.. இட் வாஸ் எ நைட்மேர் இயர்.."

"ஆமாம் மேடம்.. எனக்கு ஞாபகம் இருக்கு.. இன்னொரு தடவை ரன்னிங் ரேஸுல தன்னை ஜெயிச்சுட்டான்னு வெங்கட்டை கருங்கல்லை வச்சு மண்டையை உடைச்சுட்டான்.. கார்த்திக் னு ஒரு பையன் கூட எப்பவும் சண்டை..அவன் முகுந்தை கிண்டல் செஞ்சுக்கிட்டே இருப்பான்."

கார்த்திக் என்ற தன் பெயரைக் கேட்டு அவன் திரும்பினான்.. அவனுக்கு ஒரே ஆச்சரியம்.. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்த ஹரி மற்றும் வசந்தா மேடம் இவர்களை இவ்வளவு வருஷம் கழித்து பார்ப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை..

"எப்படி டா இருக்க ஹரி.. மிஸ் நான் தான் கார்த்திக்.. ஞாபகம் இருக்கா"

அனைவருக்கும் ஆச்சரியம்.. ஆனால் ரவிக்கு ஏதோ உறுத்தியது..

ஒருவர் எதேச்சையாக சந்தித்தால் COINCIDENCE என்று சொல்லலாம்..இப்படி நான்கைந்து பேர் பல வருடம் கழித்து ஒரே விமானத்தில்..

அவன் முகம் மாறுவதை எல்லோருமே கவனித்தனர்..

"என்ன விஷயம்?" என்றாள் மாலினி.


"நீங்க எல்லோரும் எப்படி இந்த பிளைட் புக் பண்ணீங்க? "

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "நான் புக் பண்ணவில்லை.. என்னோட கார்டு கம்பெனி ஃபிரீயா கொடுத்தது " என்றான் ஹரி..

மற்றவர்களும் தங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை என்பது தெரிந்தது.. ரவி யோசித்தான்.. கொஞ்சம் குரலை உயர்த்தி மற்ற பயணிகளிடம் கேட்டான்.."இங்கே இருப்பவர்கள் எத்தனை பேருக்கு முகுந்த் என்பவரைத் தெரியும்.. "

சற்று நேரம் கழித்து ஒரு 25- 30 பேர் கையை உயர்த்தினர்..

"நீங்கள் யாரும் நீங்களாக பிளையிட் டிக்கெட் புக் செய்யவில்லையா?"

கையை உயர்த்திய அனைவரும் பீதியுடன்  தலையசைத்தார்கள்..

ஸ்பீக்கரில் பைலட்டின் குரல் ஒலித்தது.. இந்த முறை அனைவரும் அதை உற்றுக் கேட்டனர்.

"திஸ் இஸ் யுவர் கேப்டன் முகுந்த் ஸ்பீக்கிங்... மை கோ பைலட் இஸ் டெட்.."

அந்த விமானம் அரபிக்கடலை நோக்கி வேகமாக இறங்கிக்கொண்டிருந்தது .


(என்னுடைய முதல் கதை எழுதும் முயற்சி.. ஒரு பிரெஞ்சு குறும்படத்தை தழுவி எழுதியது.)

- நாராயணன் ஸ்வாமிநாதன்


























Thursday, September 14, 2017

Alessandro Alessandroni ஒரு ஆச்சரியமான திறமைசாலி. அற்புதமான கிட்டார் பிளேயரான  இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளரும் கூட. கிட்டத்தட்ட 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார். Sergio Leone, Ennio Morricone மற்றும் Alessandroni யின்  கூட்டணியில் உருவான பல படங்கள் உலகப்பிரசித்தி பெற்றவை.

'ஸ்பகெட்டி வெஸ்டர்ன்' என்று ஒரு genre ஐயே உருவாக்கியவர்கள் இவர்கள். வெஸ்டர்ன் என்பது தமிழில் புரியும்படி சொன்னால் ஜெய்ஷங்கரின் (கர்ணனின்) கௌபாய் படங்கள். இவர்கள் இத்தாலியில் இருந்து படங்கள் எடுத்ததால் spagetti western என்று அழைக்கப்பட்டன. macaroni வெஸ்டர்ன் என்றும் ஒரு ஜானர் உண்டு.

இத்தாலி நாட்டு இளையராஜாவான Morricone (500 படங்களுக்கு மேல்), பட்ஜெட் காரணமாக செர்ஜியோ லியோன்  படங்களில் பெரிய ஆர்கெஸ்ட்ரா பயன் படுத்த முடியாததால், கிட்டார், மோர்சிங் (jewish harp ), விசில், சாட்டைச்சத்தம், துப்பாக்கி சத்தம், ட்ரம்பெட்  என்று செலவில்லாமல் பார்த்துக்கொண்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தானே.. இந்த 'வாத்தியங்களை' வைத்துக்கொண்டே ஒரு இசைப்புரட்சி செய்தார்.

இங்கு தான் தன் பால்ய ஸ்நேகிதனான அலெசாண்ட்ரானியின்  அற்புத திறமையை பயன்படுத்திக் கொண்டார். dollars trilogy என்று சொல்லப்படும்
A Fistful of Dollars (1964), For a Few Dollars More (1965) மற்றும் The Good, the Bad and the Ugly (1966) ஆகிய படங்களில் இவர்களின் கூட்டணி அட்டகாசம் செய்தது.


Alessandroni கிடார் வாசித்துக்கொண்டே விசில் அடிப்பதில் கில்லாடி. இந்த 3 படங்களிலும் அவருடைய விசில் மற்றும் கிட்டார்  தான் தீம் மியூசிக். கம்போஸர், கிட்டார் கலைஞர் என்பதைத்தாண்டி இந்த விசில் திறமை தான் அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.

https://youtu.be/CpZjvbSC9_M

https://youtu.be/mLXQltR7vUQ

https://youtu.be/h1PfrmCGFnk


https://youtu.be/I3AFeCKFZl0

https://youtu.be/pLgJ7pk0X-s

https://youtu.be/2RGrz1mZve8

******

தமிழ்ப்படங்களில் Whistling என்பதை முதன்முதலாக விஸ்தாரமாக பயன்படுத்தியது மெல்லிசை மன்னர்களே.. சட்டென்று நினைவுக்கு வருவது நீரோடும் வைகையிலே, வந்த நாள் முதல், உள்ளத்தை அள்ளிக்கொஞ்சம் தா போன்ற பாடல்கள்.. யார் அந்த whistler என்பதை விவரம் அறிந்தவர்கள் சொல்லலாம்.

https://youtu.be/0Ded74fqkOA

https://youtu.be/Yhrp0_XgjdQ

https://youtu.be/Xt9pncmbTYI

SPB அருமையாக விசில் அடிக்கக்கூடியவர். மேடைகளில்  பாடும் போதே விசிலும் அடித்து அசத்துவார்.. ரஹ்மானின் தொடத்தொட மலர்ந்ததென்ன பாடல் பற்றி அவர் பேசியது இதோ..

https://www.youtube.com/watch?v=U9qmN1mNJnU

YGEE MAHENDRA அவர்களும் ஒரு அற்புத விசில் கலைஞர்.. அவருடைய நடிகர், மிருதங்க வித்வான் போன்ற  பல முகங்களில் இதுவும் ஒன்று. MSV - TKR பாடல்களை விசிலில் வாசித்து ஒரு சீடியே போட்டிருக்கிறார்.

https://youtu.be/94Bfzel8zPM

மெல்லிசை மன்னர்கள் தவிர எனக்கு ஞாபகம் வருவது சுதர்சனம் இசையில் அன்னை படத்தில் வரும் 'புத்தியுள்ள மனிதர் எல்லாம்' பாடல், மற்றும் தேனிலவு படத்தில் ஏ.எம்.ராஜா இசையில் பாட்டு பாடவா பாடலில் வரும் PRELUDE . மற்ற விசில் பாடல்களை ரசிகர்கள் நிரப்பலாம்.

https://www.youtube.com/watch?v=8ImA2bPgICM

https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo

********

ராஜா இசையில் பல பாடல்களில்  விசில் அற்புதமாக பயன் படுத்தப்பட்டுள்ளது. அவரே ஒரு விசில் கலைஞர் தான். காதலின் தீபம் ஒன்று பாடல் கம்போசிங் போது உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். PRELUDE, INTERLUDE எல்லாம் நோட்ஸ் எழுதி விடலாம். TUNE சொல்லிக்கொடுக்க பாடித்தானே ஆகவேண்டும்.. பாட முடியாத நிலையில் முழு மெட்டையும் விசில் அடித்தே சொல்லிக்கொடுத்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

நினைவில் வரும்  விசில் பயன் படுத்தியிருக்கும் ராஜா பாடல்களை கொடுக்கிறேன். மேலும் உள்ளவற்றை ரசிகர்கள் கூறலாம்.

ஏ ஆத்தா - பயணங்கள் முடிவதில்லை
மதன மோக ரூபசுந்தரி - இன்று போய் நாளை வா
காங்கேயம் காளைகளே - இன்று நீ நாளை நான்
டார்லிங் டார்லிங் - பிரியா
ஈரமான ரோஜாவே - இளமைக்காலங்கள்
உறவெனும் இனிய வானில் - நெஞ்சத்தை கிள்ளாதே
நினைவோ ஒரு பறவை - சிகப்பு ரோஜாக்கள்
வந்தாளே அல்லிப்பூ - கண் சிவந்தால் மண் சிவக்கும்

இவை எல்லாவற்றையும் விட ஒரு பாடல் எனக்கு மிகவும் விருப்பமான பாடல் ஈரவிழிக்  காவியங்கள் படத்தில் வரும் பழைய சோகங்கள் என்ற பாடல். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களுமே Avant garde என்று ராஜா ரசிகர்களால் கொண்டாடப் படுபவை. ராஜா செய்த ஆல்பங்களிலேயே சிறந்தது என்று சொல்பவர்களும் உண்டு.

கிட்டார், ராஜாவின் குரல், மற்றும் விசில் அவ்வளவு தான். அந்த கிட்டார் ரிஃப்பை கேட்கும் போதெல்லாம் எனக்கு அலெசாண்ட்ரானியின் fist full of dollars தான் ஞாபகம் வரும்.

I think it was our Maestro's tribute to another Master.

https://www.youtube.com/watch?v=fPsJxcMUIYM








Sunday, August 13, 2017

நோடா NOTA என்றால் என்ன?

nota - நோடா விற்கு வோட்டு போடுங்கள் என்று டுபாகூர் பதிவு ஒன்று சுற்றி வருகிறது..
நோடாவிற்கு எந்தவித சட்டபூர்வ அங்கீகாரமும் கிடையாது..
ஒரு தொகுதியில் 100 பேர் வோட்டு போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்..
அதில் 99 பேர் நோடாவிற்கு வோட்டு போட்டாலும் அந்த 1 வோட்டு வாங்கிய வேட்பாளரே வென்றதாக அறிவிக்கப் படுவார்..
ஏனென்றால் அது தான் செல்லக் கூடிய வோட்டு.. மற்றதெல்லாம் செல்லா வோட்டு..

Rule 49-O was a rule in The Conduct of Elections Rules, 1961[1] of India, which governs elections in the country. It described the procedure to be followed when a valid voter decides not to cast his vote, and decides to record this fact.[2] The rule was declared by the Supreme Court in September 201…
EN.WIKIPEDIA.ORG
22 Comments
Comments
Narayanan Swaminathan ஐயா, என்ன பிராடுத்தனம் என்று விளக்கினா நல்லாருக்கும்.
Manage
குணசேகர் செல்லங்குலம் அவினாசி யாரும் நோட்டாவுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற என்னத்திலும் இப்படி இருக்கலாம்
Manage
Ganesan Mks
Ganesan Mks தயவு செய்து இருப்பதில் better எதாவது இல்லாமல
இல்லாமல் போகாது. அதற்கு போடுங்கள் எதாவது பலன் இருக்கும்.சிந்தனை செய் மனமே
Manage
குணசேகர் செல்லங்குலம் அவினாசி அண்ணா 99 பேர் நோட்டா என்றால் எதற்க்கு நோட்டா.....
அதான் அப்படி சொன்னேங்க...
அதுக்கு பேசாமா நோட்டாவ இல்லாமலே செய்து இருக்கலாமுங்கலே
Manage
Narayanan Swaminathan முன்னாடி எல்லாம் நீங்க யாருக்கும் வோட்டு போடா விரும்பலேன்னு பதிவு செய்யணும்னா அதுக்கு 17-a ன்னு ஒரு பார்ம் கொடுப்பாங்க. அதை நீங்க உங்க பேரச் சொல்லி கையெழுத்து போட்டு வாங்கணும்.. அப்போ நீங்க யாருன்னு தெரிஞ்சிடும் இல்லையா?அப்படி தெரியாம உங்க identity ய பாதுகாக்க தான் இந்த பட்டன் கொடுத்திருக்காங்க.
Manage
குணசேகர் செல்லங்குலம் அவினாசி சரிங்க எப்படி தோத்தவருக்கு வாய்ப்பு கிடைக்குங்க
முறைப்படி அவர் அந்த பதவிக்கு தகுதி அல்லாதவர்தானேங்க
Manage
Narayanan Swaminathan எந்த முறைப்படி?
Manage
Narayanan Swaminathan அதுக்கு தான் சொல்லறோம்... நீங்க யாருக்கு எதிரா நோடா போடறீங்களோ அவங்களுக்கு தான் அது உதவியா இருக்கும்.
Manage
Narayanan Swaminathan நோடா ஜெயிக்கவோ தோற்கவோ முடியாது..
Manage
குணசேகர் செல்லங்குலம் அவினாசி எனக்கு புரிலங்க விளக்கமா சொல்லுங்கலேன்
Manage
Narayanan Swaminathan அதுக்கு எந்த validity உம கிடையாது... உங்க எதிர்ப்ப பதிவு பண்ணலாம். அவ்வளவு தான்
Manage
Narayanan Swaminathan ஏன்னா அது ஒரு வேட்பாளர் கிடையாது... ஒரு வேட்பாளர் தான் ஜெயிக்கவோ தோற்கவோ முடியும்.
Manage
குணசேகர் செல்லங்குலம் அவினாசி எதிர்ப்பை பதிவதால் என்ன பயன்ங்க
Manage
Narayanan Swaminathan அதே தான்.. கரெக்டா பாயிண்ட புடிச்சீங்க... அதனால தான் அதை செய்யாதீங்கன்னு சொல்றோம்.
Manage
Narayanan Swaminathan இருந்தும் அது ஏன் இருக்குன்னா... எனக்கு புடிக்கலேன்னு சொல்றதுக்கு எனக்கு உரிமை வேண்டும் இல்லையா.. அந்த உரிமை தான் nota -- நோடா 49 0 எல்லாம்..
Manage
குணசேகர் செல்லங்குலம் அவினாசி அப்ப இது வெட்டி வேலையாங்க
இதுக்கு ஒரு சாப்ட்வெர்..
அதுக்கு என்று ஒரு தொகை எல்லாமே வீண்.
...See More
Manage
Narayanan Swaminathan இதுக்குன்னு தனியா சாப்ட்வேர் எதுவும் செய்யல.. evm வந்த பின்னும் அதில் இந்த option இல்லாமல் இருந்தது.. பழைய form வாங்கி பதிவு பண்ற முறையே இருந்தது. அது evm மெஷினில் include செய்தார்கள். அவ்வளவு தான்.
Manage
Adayapalam Neelakantan Margabanthu இதற்கு மேல் இதை சிறப்பாக விவரிக்க யாராலும் முடியாது...
Manage
Narayanan Swaminathan 1961 லிருந்து இந்த 49 ஓ இருக்கு. ஞானி மாதிரி பத்திரிகையாளர்கள் தான் ஒண்ணுமில்லாத இந்த விஷயத்தை என்னவோ இந்தியாவ மாற்றப்போற புரட்சி மாதிரி பெரிசு ஆக்கினாங்க.. இந்த கம்முநிஸ்டுகளே இக்ப்படித் தான்... எதையாவது முன்னிறுத்தி இது தான் உங்கள விடுவிக்கப் போகும் அருமருந்துன்னு சொல்லிகிட்டே இருக்கணும்.. அது தோத்துப் போனா இன்னொன்னு... கேஜ்ரிவால் போனா கண்ணையா மாதிரி.
Manage
https://www.facebook.com/narayanan.swaminathan/posts/10206359645129776

https://www.facebook.com/narayanan.swaminathan/posts/10201851323624556
 
Custom Search